புலித்தேவன் மற்றும் நடேசனை கொலை செய்ய உத்தரவிட்டது யார்?

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமல் இருக்க செய்வதில் அமெரிக்கா முனைப்பாக செயற்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

இதன் தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து தகவல்களை பெற்றுள்ளதாக குறித்த நாளிதழ் தெரிவித்துள்ளது

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவலின் அடிப்படையில் வெள்ளைக்கொடிகளை ஏந்திவந்த விடுதலைப்புலிகளின் சமாதான அலுவலர் புலித்தேவன் மற்றும் அவர்களின் காவல்துறை அதிபர் நடேசன் ஆகியோரை கொலை செய்ய கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டாரா? என்ற விடயத்தை அமரிக்க அதிகாரிகள் வினவியுள்ளனர்

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பில் கோட்டாபயவுக்கு உள்ள தொடர்புகள் தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது

கோத்தபாய ராஜபக்ச 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அமரிக்கா விரும்பவில்லை என்று பதவியில் இருந்து விடைப்பெற்று சென்ற அமெரிக்க தூதுவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது