கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய ரயில்! ஆபத்தான நிலையில் பலர்

பொல்கஹவெல ரயில் நிலையத்தின் பனலிய பிரதேசத்திற்கு அருகில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 32 பேர் தற்போதைய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 4.50 மணியளவில் கொழும்பில் இருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த மற்றுமொரு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர ப்ரேமரத்ன இதனை தெரிவித்துள்ளனர்.