விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள்: 28 நாடுகளிடம் இரகசியமாக சொன்ன இலங்கை!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விதிமுறைகளில் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளால் தொடர்ந்தும் ஆபத்து உள்ளது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளையும் ஏற்றுக்கொள்ள செய்துள்ளோம் என்று பிரசல்ஸிற்கான இலங்கையின் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸில் தொடர்ச்சியாக சந்திக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் கருத்துக்களை அதிகாரிகள் உரிய வடிவத்தில் பின்பற்றுவதை தூதரகம் உறுதிசெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் விடுதலைப்புலிகளை தடைசெய்த அமைப்புக்களின் பட்டியலில் இணைத்திருந்தது.