கைதான வாள்­வெட்­டுக் கும்­ப­லு­டன் – பொலி­ஸூக்­கும் தொடர்பு?

சாவ­கச்­சே­ரி­யில் கைதான இளை­ஞர்­கள் வாள்­வெட்­டுக் குழு­வைச் சேர்ந்­த­வர்கள் என்று குற்­றம் சுமத்­தி­யுள்ள பொலி­ஸார், அவர்­க­ளுக்­கும் பொலி­ஸார் சில­ருக்­கும் தொடர்பு இருக்­கின்­றதா என்ற கோணத்­தில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

தென்­ம­ராட்­சி­யின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளைச் சேர்ந்த இளை­ஞர்­கள் 7 பேர் மானிப்­பாய் பொலி­ஸா­ரால் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டார்­கள். சிவில் உடை­யில் சென்ற மானிப்­பாய் பொலி­ஸார் இவர்­க­ளைக் கைது செய்­தி­ருந்­தார்­கள்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் மூன்று பேருக்கு எதி­ராக வேறு வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளது. வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் தம்­மால் பிர­தா­ன­மாக தேடப்­பட்டு வந்த இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் உள்­ள­டங்­கு­கின்­றார்­கள் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இவர்­களை விட மேலும் 9பேரைத் தேடி வரு­வ­தா­க­வும், அவர்­கள் தலை­ம­றை­வாகி விட்­ட­தா­க­வும் பொலி­ஸார் குறிப்­பிட்­டார்­கள்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளில், வெளி­நாட்­டி­லி­ருந்து பணப்­ப­ரி­மாற்­றல் சேவை­யூ­டாக ஒரு­வ­ருக்கு பணம் அனுப்­பப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்தனர்.

சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் மூன்று ஆண்­டு­க­ளுக்கு மேலா­கக் கட­மை­யாற்­றும் சில பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்­கும், கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்­கும் இடை­யில் தொடர்பு இருக்­கின்­றதா என்ற கோணத்­தி­லும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­க­ளின் அலை­பே­சி­களை மையப்­ப­டுத்­தியே இந்த விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கப் பொலி­ஸார் குறிப்­பிட்­டார்­கள்.