பயணிகளின் உயிருடன் ஓட்டப் பந்தயம் நடத்திய தனியார், இ.போ.ச பஸ்கள்

வவுனியா மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்று 06 மாலை 5.15 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றும் வவுனியாவிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டானீச்சூர் பகுதியிலிருந்து வேப்பங்குளம் 6 ம் ஒழுங்கை வரை போட்டி போட்டுக்கொண்டு வீதியில் சமமாக சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையடியில் வைத்து குறித்த தனியார் – இ.போ.ச பஸ்கள் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு தண்டப்பத்திரம் வழங்கினார்கள்.

இவ்வாறான இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களின் போட்டித்தன்மை காரணமாக பொதுமக்கள் தினசரி பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.