16 வருட குடும்ப வாழ்க்கையை சிதைத்த 4 நாள் பேஸ்புக் காதல்!

பேஸ்புக் காதலால் குடும்பம் ஒன்று சிதைந்து போயுள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.16 வருடங்களாக சந்தோஷமாக இருந்த மனைவி, தனது கணவனை கைவிட்டுச் சென்றுள்ளார்.4 நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்ட நபருக்காக குறித்த பெண் இவ்வாறு கணவனை கைவிட்டுள்ளார்.

15 வயதுடைய மகள் உட்பட 3 பிள்ளைகளின் தாயான 40 வயதுடைய பெண் ஒருவரே இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

தனது மனைவியின் செயலை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.அத்துடன் கண்ணீர் விட்டு அழுத கணவனை சமாதானப்படுத்தி பொலிஸார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.