கோட்டை தொடருந்து நிலையத்துக்கு பூட்டு!!

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்குள் பயணிகள் பிரவேசிக்க முடியாதவாறு பூட்டுப் போட்டு இட்டு மூடப்பட்டுள்ளது.

தொடருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தொடருந்துத் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.