வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற இருவர் விமான நிலையத்தில் கைது!

இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10 தங்கப்பாளங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹபாகே பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் மற்றும் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரொருவமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட குறித்த தங்கப்பாளங்களின் பெறுமதி சுமார் 65 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.