மடு யாத்திரை செல்வோருக்கு தண்ணீரும் உணவும் வழங்கல்

மடுத்தேவாலயத்தின் பெருநாளை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், நடை பயணம் செய்யும் அடியவர்களுக்கான – சிற்றுண்டி, குடிதண்ணீர் ,குளிர்பானம் வழங்கும் நடமாடும் சேவையை வன்னிக்குறோஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சி.சிவமோகனின் பணிப்பின் பேரில் ,வன்னிக்குறோஸ் நிறுவனத்தின் கிளை அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 11 ஆம் திகதி காலை 10 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை ஒட்டுசுட்டானில் இருந்து வவுனிக்குளம் வரை 600 மேற்பட்ட அடியவர்களுக்கு சிற்றுண்டி, குடிதண்ணீர் , குளிர்பானம் ஆகியவை வழங்கும் நடமாடும் சேவை ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்தப் பணியில் வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முல்லைமாவட்டத்தின் தலைவி சு.வளர்மதி, ஒட்டுசுட்டான் பிரதேச தலைவி சத்தியவாணி ,கலாசார பேரவையின் நிர்வாகத்தினரம் வழங்கியிருந்தமை குறிபிடத்தக்கது.