வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

ஒரு தொகை வல்லப்பட்டை மற்றும் கோகும் பட்டைகளை சட்டவிரோதமான முறையில் பெங்கொக் நோக்கி எடுத்துச்செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கட்டுநாயக்க வானூர்தித் தளத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வியாபாரி ஒருவரே கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் எடுத்து வந்த பையில் இருந்து 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டை 7 கிலோ 400 கிராமும், கோகும் பட்டை 17 கிலோ 400 கிராமும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வல்லப்பட்டை மற்றும் கோகும் பட்டை தொகை அரசுடமையாக்கப்பட்டதுடன், சந்தேக நபருக்கு 1 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.