ஒன்றுடன் ஒன்று மோதிய நான்கு வாகனங்கள் விபத்து

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் தெதுரு ஓய பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு பேருந்துகள் மற்றும் இரு மோட்டார் வாகனங்களே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

வாகன நெரிசல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் மீது நீர்கொழும்பிலிருந்து கல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோதியது.

இதனால் மோட்டார் வாகனம் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மோதியது. பின்னர் குறித்த பேருந்து முன்னால் இருந்த மோட்டார் வாகனத்துடன் மோதியதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பில் இருந்து கல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தை தவிர ஏனைய வாகனங்கள் மூன்றும் ராஜகிரியவில் இருந்து மடு தேவாலயத்துக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.