இன்றைய ராசிபலன் 15-08-2018

மேஷம்: அனுகூலமான நாள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்: அதிர்ஷ்டகரமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றபடி வழக்கமான பணிகளில் பிரச்னை எதுவுமிருக்காது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மிதுனம்: மனதில் சிறு சலனம் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரிலுள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடகம்: புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட அதிகம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சிம்மம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண்மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கன்னி: உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

துலாம்: தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்துவிடுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு: புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சிறு தடை ஏற்பட்டாலும் முடிந்துவிடும். சிலருக்கு குடும்பத்துடன் விருந்து விசேஷங் களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. வியாபா ரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பம்: இன்று சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். தெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்னைகளைச் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு வீண் அலைச்சலால் உடல் அசதி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மீனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்பட்டாலும், ஆதாயம் தருவதாகவே இருக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.