லண்டனிலிருந்து – யாழ் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது மூதாட்டியே இவ்வாறு, கிணற்றில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி சப்பச்சிமாவடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லண்டனிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்த மூதாட்டியை, நீண்ட நேரம் காணாது தேடிய அயலவர்கள் அவர் கிணற்றில் சடலமாக காணப்பட்டதை கண்டுடிபிடித்துள்ளனர்.

இதனையடுத்து குடும்பத்தினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.