மோட்டார் சைக்கிள் விபத்தில்- வீதியால் சென்ற பெண்ணும் உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்தவர் வீதியால் சென்ற பெண்ணையும் மோதித் தள்ளினார். அதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து கொழும்பு மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியில் பெலவத்த பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திய மாதம்பையைச் சேர்ந்த 31 வயதுடைய ஆணும், வீதியால் பயணித்த 73 வயதுடைய பெண்ணும் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.