சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற நபர், இன்று காலை திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற நபர், இன்று காலை திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கடந்த 3 நாள்களாக ஆலயத்தில் தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.சடலம் மந்திகை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.