வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறியால் இருவருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை -ஹொரவபொத்தான பிரதான வீதி 10ஆம் கட்டைப் பகுதியில் லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

புத்தளம் பகுதியிலிருந்து உப்பு ஏற்றி வந்த லொறியே விபத்துக்குள்ளானதாகவும் சாரதி மற்றும் உதவியாளரே காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்த இருவரையும் மஹதிவுல்வெவ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக விபத்து இடம்பெற்ற பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.