யாழில் வீடு புகுந்த கொள்ளையர்கள்! தம்பதிக்கு செய்த காரியம்

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தம்பதியைத் தாக்கிவிட்டு, இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் கோப்பாய் ஊரெழுப்பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.

காயமடைந்த தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.