ஓடு பிரித்து திருட முயற்சித்த திருடன் பதறி ஓட்டம்! யாழில் சம்பவம்

மந்திகையில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள தொலைலைபேசி விற்பனை நிலையத்தில் ஓடு பிரித்து திருட முயன்ற திருடன் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடை உரிமையாளர் விழித்துக் கொண்டதால் திருட்டு முயற்சியைக் கைவிட்டு திருடன் ஓட்டம் பிடித்துள்ளான்.

அவர்கள் வந்த பல லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடையில் ஓடு பிரித்து இறங்குவதற்கு திருடன் முயற்சித்துள்ளார். அந்த வேளை கடைக்குள் கடையின் உரிமையாளர் படுத்திருந்துள்ளார். சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவர், அயலிருந்தவர்களுக்கு தொலைபேசியில் தகவலைத் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கு வந்ததும், கூரையில் ஏறிய திருடன் தப்பித்து ஓடியுள்ளார்.

மற்றொருவர், கடையின் பின்புறமாகவுள்ள பனங் காணியினுள் உந்துருளியுடன் நின்றுள்ளார். கூரையில் ஏறிய திருடன் தப்பித்துச் செல்லும்போது மோட்டார் சைக்கிளை கைவிட்டு அந்தத் திருடனும் தப்பித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளை மீட்ட பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.