தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! 25000 ரூபாவாக அதிகரிக்குமா சம்பளம்?

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்ச தெரிவித்துள்ளது.

சமகால கோரிக்கைகளுக்கு அமைய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் ரவீந்ர சமரவீர தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

தனியார் துறையினரின் குறைந்தபட்ச சம்பளம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் 9 தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.