கட்டாருக்குத் தொழில் தேடிச் சென்ற- 21 பேர் உயிரிழப்பு!!

இந்த வருடத்தில் கட்டார் நாட்டுக்குத் தொழில் வாய்ப்பத்தேடி சென்றோரில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 19 பேரின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஏனைய இரண்டு பேரின் சடலம் இதுவரையில் கொண்டு வரப்படவில்லை எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த இருவரின் சடலங்களும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.