யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகில் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்! தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழில் கிணற்றில் இருந்து 6 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்தே இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள், விடுதலைப் புலிகளின் காலத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.