யாழ்ப்பாண இளைஞனால் வரையப்பட்ட – மிகப்பெரிய பிள்ளையார் ஓவியம்!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்குவேலிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மிகப் பெரிய பிள்ளையாரின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தின் நூற்றாண்டு நினைவாக ஐங்கரன் என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பிள்ளையார் ஓவியம் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.