ரெஜினா கொலை- சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு!!

யாழ்ப்பாணம் சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மல்லாகம் நீதிமன்றம் மீண்டும் விளக்கமறியல் நீடித்துள்ளது.

சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற சிறுமி கடந்த ஜுன“ மாதம் 25 ஆம் திகதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் கழுத்தில் கீறல் காயங்கள் காணப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.