கட்டட நிர்மாணத்துக்கான அனுமதி- இனி இணையத்தளத்தில்!!

கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டட நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்கும் பணியை இணையத்தளத்தினூடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனுமதியை வழங்கும் செயற்பாடுகள் விரைவாக இடம்பெறும் என்று கொழும்பு மாநகர சபையின் நகர திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறைகளின் கீழ் நிர்மாண பணிக்கான அனுமதியை இரண்டு வாரத்துக்குள் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்குவதற்கான ஒழுக்க விதிகளை இதன் மூலம் ஏற்படுத்தவும் எதிர்பார்த்திருப்பதாகவும் கொழும்பு மாநகரசபை திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.