கிளிநொச்சியில்- முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது!!

ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருள்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த நபர்களைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட்ட போது, அதற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு என்பன மீட்கப்பட்டன.