“இலங்கை கடற்கரையில் மிதக்கும் மர்மநபரின் சடலம்!

பமுணுகம – உஸ்வெடகெய்யாவ – ஏபாமுல்ல கடல்கரையில் இருந்து நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவாக நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

உஸ்வெடகெய்யாவ – அம்பலம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்தது.