சற்று முன்னர் யாழில் ரயில் விபத்து! பரிதாபமாக பலியான இரண்டு இளைஞர்கள்

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் சற்று முன்னர் யாழ்பாணம் சாவகச்சேரி, சங்கத்தானை அரசடி சந்தியிலுள்ள ரயில் கடவைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயிலுடன், ரயில் கடவையை கடக்க முயன்ற மோட்டர் சைக்கிளே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது