60 வயது வயோதிப பெண்ணையும் விட்டுவைக்காத இளைஞர்கள் ?

இரு இளைஞர்கள் 60 வயது நிரம்பிய பெண் ஒருவரை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவறாதொல என்ற பிரதேசத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பசறை பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

60 வயது நிரம்பிய வயோதிபப் பெண் ஒருவர், இரவு தனது பக்கத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தொலைக்காட்சியை பார்வையிட சென்றுள்ளார்.

சுமார் 8.30 மணியளவில் தொலைக்காட்சியைப் பார்த்த பிறகு, தனது வீட்டை நோக்கி சென்ற குறித்த வயோதிபப் பெண் இருள் சூழ்ந்திருந்த வீட்டின் கதவை திறக்க முற்பட்ட வேளையில், வீட்டினுள்ளே இரு இளைஞர்கள் பெண்ணை துர்நடத்தைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.