பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு!!

நுவரெலியா நகரில் அமைந்துள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

58 வயதுடைய ஜீ.சுனில்சாந்த என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
திருமணமாகாத இவர், குறித்த பத்திரிகை நிலையத்திலிலேயே தொடர்ந்து தங்கி வந்துள்ளார்

இந்தநிலையில் இன்று காலை குறித்த பத்திரிகையை நிலையம் திறக்காததை அடுத்து, பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் பூட்டிருந்த கடையை உடைத்து பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பின், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.