சிறந்த தமிழ்த் தலைவரைத் தெரிவு செய்யக் கோரி துண்டு அறிக்கை!!

”இது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம் ” எனற் நோக்குடனான துண்டு அறிக்கைகள் கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளிலும் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் என்ற அமைப்பு இதனை விநியோகித்துள்ளது

முதலில் நாம் ஒரு தமிழ்த் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும். சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள், தமிழர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள், சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெறவேண்டும்”உள்ளிட்ட கருத்துக்கள் அதில் குறிப்பிடப்படிருந்தன.