யாழில் திருவிழாவை பயன்படுத்தி நடத்தப்படும் மோசமான செயற்பாடு…!!

திருவிழாவில் திருடர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் வடமராட்சி, தொண்டைமானாறு சந்நிதி ஆலயத் தேர்த்திருவிழாவில் சனநெரிசலைப் பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 15 பவுண் நகை களவு போயுள்ளதாக 6 பேர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சந்தேகத்தில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.