மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

குருணாகலில் கணவனின் தாக்குதலில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

46 வயதான குறித்த தாதி குருணாகல் வைத்தியசாலையில் சேவை செய்து வருகின்றார். தாக்குதலை மேற்கொண்டவர் 29 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாதியின் இரண்டாவது கணவர் மேற்கொண்ட்ட தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 3 பிள்ளைகளின் தாய் எனவும், அவர் முதல் கணவரை பிரிந்த நிலையில் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.