மரண வீட்டிலும் அரசியல்!

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது வீட்டில் இருந்தவாறு பார்த்துள்ளார்.

எல்லை நிர்ணய குழு அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

எனினும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் காலமாகிய கரணத்தினால், அவரால் அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக தனது அலைபேசி ஊடாக வீட்டில் இருந்தபடி அவர் வா்கெடுப்பினை பார்த்துள்ளார்.குறித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.