புத்தளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

புத்தளத்திற்கு சுற்றுலா சென்ற சிறுவனொருவர் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாறவில பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தேவநாயகம் ருஷாந்தன் (10 வயது) எனும் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.