இலங்கை சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த துன்பம்…!!

காலியில் இளைஞர்கள் சிலர் குறித்த யுவதியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளனர்.

காலி உனவட்டுன கடற்கரை களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு அதிகாலை 2 மணியளவில் காலி நகரிலிருந்து விடுதிக்கு நடந்து சென்றுக்கொணடிருக்கையில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த இளைஞர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதோடு தலைமறைவாகியவர்களை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.