மட்டக்களப்பு விபத்தில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு – பாசிக்குடாவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மற்றொரு இளைஞர் கால் உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.செம்மண்ணோடை பாடசாலை வீதியை சேர்ந்த அஹமட் லெப்பை முஹம்மத் அஸிம் (வயது 17) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அதே இடத்தைச் சேர்ந்த லத்தீப் முஹம்மத் நிப்றாஸ் (வயது 17) என்பவர் ஒரு கால் உடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இருவரும் மோட்டார்சைக்கிளில் பாசிக்குடா சென்று திரும்பும் போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மருங்கிலிருந்த மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் விபத்துச் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.