இறப்பிலும் மகளுடன் கூடவே சென்ற தாய்!!

மகள் இறந்த செய்தியை அறிந்த தாய் திடீர் மாராடைப்பால் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம் மெல்சிறிபுர, போகஹபிட்டிய பிரதேசத்தில் நடந்துள்ளது.

14 வயதுடைய மகள் நேத்மி நிஷாதி பெரேரா நீண்ட காலமாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இதனை அறிந்த 34 வயதுடைய அனுஸா தமயந்தி குமாரி தாயாரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மகளின் சடலம் வீட்டுக்குக் கொண்டு வந்த தருணத்தில் திடீரென மயக்கமுற்று விழுந்த தாாயர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தாய் மற்றும் மகளின் சடலம் மெல்சிறிபுரயில் உள்ள பொது மயானத்தில் ஒரே குழிக்குள் புதைக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.