தப்பியது யாழ்தேவி!!

இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நேர்ந்த இடர் சீர் செய்யப்பட்டது. இதில் யாழ்தேவி தொடருந்து சேதமின்றி தப்பியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் இன்று காலை கொழும்பு சிறிவத்சிபுர பகுதியில் நடந்துள்ளது.

யாழ்தேவி தொடருந்து சமிஞ்சையை கவனிக்காமல் பயணித்த போது, அதே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மற்றுமொரு தொடருந்து பயணித்தது.

உடனடியாக தகவல் பரிமாறப்பட்டு, யாழ்தேவி தொடருந்து பயணித்த தண்டவாளம் உடனடியாக மாற்றப்பட்டு விபத்து தவிக்கப்பட்டது எனத் தெரியவருகிறது.