வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு- 80 ரூபா காசோலை!!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 80 ரூபா பெறுமதியான நிவாரண நிதி காசோலை ஒன்று வழக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இரத்தினபுரி முவகம பகுதியில் நடந்துள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்காக இந்தக் காசோலை வழங்கப்பட்டுள்ளது.கிராம சேவகரும், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து இந்த நிதியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.