அடையாள அட்டைக்கான கட்டண முறைமை- இன்று முதல் நடைமுறைக்கு!!

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 15 வயதை எட்டிய முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெறுவோரிடமிருந்து 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டையை திருத்தி, அதன் இணைப்பிரதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 250 ரூபா அறவிடப்படுவதுடன், காணாமல்போன அடையாள அட்டை ஒன்றின் இணைப் பிரதியை பெற்றுக்கொள்வதற்காக 500 ரூபா அறவிடப்பட உள்ளது .

எவ்வாறாயினும் வசதியின்மை காரணமாக கட்டணத்தை செலுத்த முடியாதோர் பிரதேச செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட “கட்டணம் செலுத்த தேவையில்லை” என்ற உறுதியை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.