கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்! சந்தேக நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் மர்மான முறையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப் பட்ட வேளை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

முன்னதாக குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

32 வயது பெண் நித்தியகலாவை கொலை செய்தமை தொடர்பில் குற்றத்தை ஒப்பு கொண்ட நபருக்கே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.