ஏ9 வீதியில் கோர விபத்து! யாழ்ப்பாணத்தை சேர்ந்த 9 பேருக்கு ஏற்பட்ட நிலை..!!

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதுள்ளனர்.

இந்த நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அனர்த்தம் இன்று அதிகாலை மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணம் சென்று மீண்டும் வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்த நபர்களின் வேன், லொரி ஒன்றின் பின்னால் சென்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வேன் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.