யாழில் இருந்து கொழும்பு சென்றவரை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

”ரெமடோல்” எனப்படும் ஒரு வகை போதை மாத்திரைகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 6000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் பெறுமதி 6 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படும் இந்த மாத்திரையை பலர் போதை பொருளாக பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்ஸொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது ஜ-எல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.