நல்லூரில் நடந்த சோகம் – இருவர் படுகாயம்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வர்த்தக நிலையமொன்றில் வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் சற்றுமுன்னர் திடீரென வெடித்துள்ளது.

இதன் போது இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.