யாழ்.பல்கலைக்கழகத்தில் பதறியடித்து ஓடும் பெண்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றும் பெண்ணின் மீது ஆண் விரிவுரையாளர் துப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மதியம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞானத்துறை கணனி விரிவுரையாளரே எந்தவித காரணமும் இல்லாமல் உதவி விரிவுரையாளரான பெண் விரிவுரையாளர் மீது காறித்துப்பியுள்ளார்.

இதனால் பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவிகளிடம் எமது செய்தியாளர் வினவிய போது, அவர் ஒரு மன நோயாளி என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் போல் இதற்கு முன்னரும் பல தடவைகள் இடம்பெற்றதாகவும் ஆனாலும் இவர் மீது பல்கலைக்கழகம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.