களத்தில் இறங்கிய மஹிந்த – கோத்தபாய! கொழும்பின் அனைத்து வீதிகளும் முடக்கம்

கூட்டு எதிர்க்கட்சியினரின் “மக்கள் சக்தி கொழும்பிற்கு” எதிர்ப்பு பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புறக்கோட்டை – அரச மரச்சந்தியில் வைத்து இணைநத்துக்கொண்டார்.

குறித்த எதிர்ப்பு பேரணி தற்போது லேக் ஹவுஸ் சுற்றவட்டத்தை அண்மித்துள்ளது.

இந்த நிலையில் , முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டையின் அனைத்து வீதிகளும் முடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.