யாழ்.கல்வியங்காட்டில் வாள்வெட்டு ; மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வாள் வெட்டில் குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு மற்றும் பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியிலுள்ள உள்ள 2 வீடுகளில் இன்று அதிகாலை சென்று வாள்வெட்டுக் குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டைச் சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய பொருள்களையும் அடித்து நொறுக்கினர். வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.