நவாலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!!

மானிப்பாய் நவாலி அட்டகிரி முருகன் கோவிலுக்கு அண்மித்துள்ள 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டது. வான் ஒன்றுக்கும் தீ வைத்தது என அறியமுடிகிறது.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.

அட்டகாசத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர் துரத்திப் பிடிக்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.