நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதித்துடன், எதிர்காலத்தில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு சிவசேனை அமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் நேற்றைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பசு வதையைத் தடுக்கும் வகையிலும் சைவ சமய விழுமியங்களைப் பேணும் வகையிலும் மாட்டிறைச்சிக் கடைகளுக்குது் தடை விதிக்க வேண்டும். அதற்கு முன்மாதிரியாக மாட்டிறைச்சிக் கடைகளை இனிமேல் குத்தகைக்கு விடக்கூடாது என்றும் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தீர்மான வரைபுக்கு ஆதரவளித்தனர். அனைவரின் ஆதரவுடன் அது தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் நல்லூர் பிரதேச சபையின் முன்மாதிரியான நடவடிக்கையை சிவசேனா அமைப்பு வரவேற்றுள்ளது.