முல்லைத்தீவு கடலில் ஏற்பட்ட மாற்றம்! அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பெருமளவான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

அந்த பகுதியில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில்ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் அதிக உப்புச்செறிவு காரணமாக பெருமளவான மீன்கள் உயிரிழந்து கரையோதுங்கியுள்ளன.

இதனால் கரையோரப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், மீனவர்களின் தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் காரணமாக பொது மக்கள் ஒரு வித அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.